விரைவில் அயோத்தி நிலத்தின் தீர்ப்பு! சட்டம் ஒழுங்கு பற்றி தீவிர ஆலோசனையில் உச்சநீதிமன்ற நீதிபதி!

இந்தியாவே ஆவலுடன் தற்போது எதிர்நோக்கி காத்திருக்கும் தீர்ப்பு என்றால், அது அயோத்தி நிலம் யாருக்கு சொந்தமாக போகிறது அல்லது வேறு தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்க உள்ளதா என்கிற தீர்ப்புதான்.
இந்த தீர்ப்பு இன்னும் சில நாட்களில் வந்துவிடும் என்பதால், வட மாநிலங்களில் தீவிர போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அயோத்தியில் வசிப்பவர்கள் தங்கள் குழந்தைகளை தங்கள் உறவினர்கள் வீட்டிற்கு வெளியூருக்கு அனுப்பி வைத்து வருகின்றனர்.
இது தொடர்பாக தீர்ப்பை கூறப்போகும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோஹாய்,  அயோத்தி தீர்ப்பு தொடர்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது என கேட்டறிந்தார்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.