இதுவரை நீங்கள் சாப்பிட்டிராத அட்டாகாசமான ரெசிபி..!

முட்டையை பயன்படுத்தி இதுவரை நம் சாப்பிட்டிராத அட்டகாசமான ரெசிபி செய்வது எப்படி என்று பார்ப்போம். 

பொதுவாகவே நம்மில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே முட்டையை பயன்படுத்தி செய்யும் அனைத்து உணவுகளையும் விரும்பி சாப்பிடுவதுண்டு. அந்த வகையில், தற்போது இந்த பதிவில், முட்டையை பயன்படுத்தி இதுவரை நம் சாப்பிட்டிராத அட்டகாசமான ரெசிபி செய்வது எப்படி என்று பார்ப்போம்.

தேவையானவை

  • எண்ணெய் – 2 ஸ்பூன்
  • சோம்பு –  ஸ்பூன்
  •  வெங்காயம் – 1
  • தக்காளி – 1 (மிக்சியில் அடித்த ஜூஸ்)
  • இஞ்சி பூண்டு விழுது – அரை ஸ்பூன்
  • மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்
  • மிளகாய் தூள் – கால் டீஸ்பூன்
  • உப்பு – தேவையான அளவு
  • முட்டை – 3

செய்முறை

முதலில் தேவையான பொருட்களை தயாராக வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி பின், சோம்பு வெங்காயம், தக்காளி சாஸ் போட்டுக் கிளறி கொள்ள வேண்டும். பின் இஞ்சி பூண்டு விழுது, மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கிளர வேண்டும்.

பின் தண்ணீர் ஊற்றி கிளறி வீட்டுக் கொள்ள வேண்டும். பின் அடுப்பில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் வைத்து கொதிக்க வைத்து, அதனுள், ஒரு குழி கரண்டியில் எண்ணெய் தடவி அதன் மேல் புறமாக வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு முட்டையை எடுத்து அதில் குழி கரண்டியில் ஊற்ற வேண்டும். பின் அதனை மூடியை வைத்து மூடி, முட்டை அவிந்தவுடன் எடுத்துக் கொள்ள வேண்டும். இப்படி எத்தனை முட்டை வேண்டுமானாலும் செய்து எடுத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு செய்து ஏற்கனவே செய்து வைத்துள்ள கலவையில் சேர்த்து லேசாக கிளறி விட வேண்டும்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.