தமிழக முழுவதும் ஆவின் பால் லாரி உரிமையாளர்கள் திடீர் வேலைநிறுத்தம்.!

  • தமிழகம் முழுவதும் தமிழ்நாடு ஆவின் டேங்கர் லாரி ஒப்பந்த உரிமையாளர்கள் சங்கம் சார்பில் வேலைநிறுத்த எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டது. நள்ளிரவு முதல் ஆவின் டேங்கர் லாரிகள் வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கி உள்ளதாக சங்கத்தின் தலைவர் சுப்பிரமணி நேற்றிரவு தெரிவித்தார்.

தமிழக அரசின் ஆவின் பால் நிறுவனம் தனியார் டேங்கர் லாரிகள் மூலம் மாநிலம் முழுவதும் தினமும் 30 லட்சம் லிட்டர் பால் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. பின்னர் ஆவின் பால் சப்ளை செய்வதற்கு 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை தனியார் டேங்கர் லாரிகளுடன் ஒப்பந்தம் போடப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஆவின் பால் லாரிகளை இயக்குவதற்கான, ஒப்பந்தம், கடந்த 2018ம் ஆண்டுடன் முடிவடைந்ததை அடுத்து, ஒப்பந்தத்தை அரசு நீட்டிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. மேலும் சத்துணவு டெண்டர் முறைகேடு புகாரில் சிக்கிய கிறிஸ்டி நிறுவனத்துக்கு முழு ஒப்பந்ததையும் வழங்கப்போவதாக தகவல் வெளியானது.

இதனை கண்டித்து தமிழ்நாடு ஆவின் டேங்கர் லாரி ஒப்பந்த உரிமையாளர்கள் சங்கம் சார்பில் வேலைநிறுத்த எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதுதொடர்பாக சென்னை நந்தனத்தில் உள்ள ஆவின் இல்லத்தில் அதிகாரிகளுடன் ஆவின் பால் லாரி உரிமையாளர்கள் நீண்ட நேரம் பேச்சுவார்த்தை நடத்தியும் சுமுக முடிவு எடுக்கவில்லை. இதனால் நள்ளிரவு முதல் ஆவின் டேங்கர் லாரிகள் வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கி உள்ளதாக சங்கத்தின் தலைவர் சுப்பிரமணி நேற்றிரவு தெரிவித்தார். வெளி மாவட்டங்களில் இருந்து பால் கொள்முதல் செய்யும் 300 டேங்கர் லாரிகளும் இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன. ஆனால் ஆவின் நிர்வாக தரப்பில் புதிய ஒப்பந்த நடவடிக்கைகளை கைவிடவில்லை என்றும், நிர்வாகத்துக்கு சொந்தமாக 53 டேங்கர் லாரிகள் இருக்கின்றன என்றும், அதனை வைத்து நிலைமையை சமாளிப்போம் என்று தெரிவிக்கின்றனர்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்