கொரோனா பரவலால் பாதிக்கப்படும் ஆட்டோ, டாக்ஸி ஓட்டுநர்கள்.. ஆவினின் புதிய முயற்சி!

தமிழகத்தில் ஆட்டோ மற்றும் டாக்ஸி ஓட்டுனர்களை நடமாடும் பால் வண்டி முகவர்களாக ஆவின் நியமனம் செய்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதன்காரணமாக சில தளர்வுகளுடன் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதன்காரணமாக தமிழகத்தில் ஆட்டோ மற்றும் டாக்ஸி ஓட்டுனர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

அவர்களின் வாழ்வாதாரத்தை காக்கும் வகையில், நடமாடும் பால் வண்டி முகவர்களாக ஆவின் பால் மற்றும் இதர பொருட்களை விற்பனை செய்யும் விதமாக, ஆட்டோ ஓட்டுனர்கள் மற்றும் நடமாடும் பால் வண்டி முகவர்களாக ஆவின் நிறுவனம் நியமித்துள்ளது.

அதில் முதற்கட்டமாக நெல்லை மற்றும் நீலகிரி மாவட்டத்தில் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்களின் ஒன்றியத்தில் இதனை செயல்படுத்தவுள்ளதாக ஆவின் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி, அந்தந்த மாவட்டங்களில் உள்ள ஆவின் பொதுமேலாளர் அலுவலகத்தில் ரூ.1000-ஐ பணமாக செலுத்தி, உடனடியாக நடமாடும் பால் வண்டி முகவர்களாக நியமித்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளது.