அசாம் வெள்ளம்.! மேலும் 7 பேர் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 66 ஆக உயர்வு.!

அசாம் மாநிலத்தில் வெள்ள பாதிப்பால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 66ஆக உயர்ந்துள்ளது.

அஸாம் மாநிலத்தில் தற்போது பருவமழை பெய்து வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால், மாநிலத்தில் உள்ள மொத்தம் 33 மாவட்டங்களில் 26 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

26 மாவட்டங்களில் சுமார் 36 லட்சம் பேர் இந்த வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக அசாம் மாநில பேரிடர் குழு தெரிவித்துள்ளது. தற்போது வெளியான தகவலின்படி, 4 மாவட்டங்களில் மேலும் 7 பேர் உயிரிழந்துள்ளதால், அசாம் மாநிலத்தில் வெள்ள பாதிப்பால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 66ஆக உயர்ந்துள்ளது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.