பிரிவு உபசார விழாவின் போது மயங்கி விழுந்து உயிரிழந்த ராணுவ வீரர்..!

பஞ்சாபில் பிரிவு உபசார விழாவின் போது, தூத்துக்குடியை சேர்ந்த ராணுவ வீரர் மயங்கி விழுந்து உயிரிழப்பு.

தூத்துக்குடியை சேர்ந்த ரவிக்குமார் என்பவர் ராணுவத்தில் பணியாற்றி ஓய்வுபெற இருந்த நிலையில், அவருக்கு பஞ்சாபில் கடந்த 29-ஆம் தேதி பிரிவு உபசார விழா நடைபெற்றது.

இந்த விழாவின் போது ரவிக்குமார் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். இதனையடுத்து, பஞ்சாபில் இருந்து ரவிக்குமாரின் உடல், விமானம் மூலம் ரவிக்குமாரின் சொந்த ஊரான தூத்துக்குடிக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு அவருக்கு, மாவட்ட நிர்வாகம் சார்பில், அரசு மரியாதையுடன் உடல் தகனம் செய்யப்பட்டது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.