மதுரை வந்தடைந்தது ராணுவ வீரர் லட்சுமணனின் உடல்..!

மதுரை விமான நிலையம் வந்தடைந்த லட்சுமணன் உடலுக்கு அமைச்சர்கள், ராணுவ வீர்ரகள் மரியாதை. 

ஜம்மு காஷ்மீர், ரஜோரி அருகே 25 கி.மீ தொலைவில் ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப் படை தாக்குதலில் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்ட நிலையில், 3 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.

இந்த பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களில் ஒருவர் தமிழகத்தை சேர்ந்த லட்சுமணன் என்ற ராணுவ வீரர் ஆவர்.24 வயதான  இவர்  மதுரை மாவட்டம் T.புதுப்பட்டியை சேர்ந்தவர்.இவரது  இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், மதுரை விமான நிலையம் வந்தடைந்த லட்சுமணன் உடலுக்கு ராணுவ வீர்ரகள் மரியாதை செலுத்தியதோடு, அமைச்சர்,  பாஜக //தலைவர்  உள்ளிட்ட அதிகாரிகள் மரியாதை செலுத்தியுள்ளனர். இதனை தொடர்ந்து அவரது சொந்த ஊருக்கு உடல் கொண்டு செல்லப்பட்டு, முழு ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட உள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment