வேலூர் மாவட்டம் அருகே ராணுவ வீரர் தற்கொலை..!

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த கீழாத்தூர் பகுதியை சேர்ந்தவர் புருஷோத்தமன், இவருக்கு அமுலு என்ற மனைவி உள்ளார், மேலும் புருஷோத்தமன் ஜம்மு காஷ்மீர் பகுதியில் ராணுவ வீரராக பணியாற்றி வருகிறார் . இவருடைய தந்தை ஆறுமுகம் அவருக்கு சில மாத காலமாக உடல்நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் அவரை பார்க்க புருஷோத்தமன் மனைவியுடன் ஆறுமுகம் சிகிச்சை பெரும் மருத்துவமனையின் அருகில் ஒரு அறை எடுத்து தங்கினார், இந்நிலையில் நேற்று காலை நீண்ட நேரமாகியும் வீட்டைவிட்டு வெளியே புருஷோத்தமன் மற்றும் அவரது மனைவி வெளியில் வரவில்லை.

மேலும் இதனால் அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் கதவை உடைத்து சென்று பார்த்தபோது மின்விசிறியில் தூக்கில் தொங்கியபடி புருஷோத்தமனும் கட்டிலில் மனைவியும் அமுலும் சடலமாக கிடந்தனர், மேலும் இந்த தற்கொலை சம்பவம் எதற்காக நடந்தது என்று காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றார்கள்.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.