FIFA WC 22:கத்தார் உலகக்கோப்பையில் விளையாடும் நேரத்தில் இங்கிலாந்து வீரர் வீட்டில் நுழைந்த துப்பாக்கி கொள்ளையர்கள்

இங்கிலாந்து கால் பந்தாட்ட வீரரான ரஹீம் ஸ்டெர்லிங் இங்கிலாந்தில்  உள்ள அவரது வீட்டில் துப்பாக்கியுடன் கொள்ளையர்கள் நுழைந்த நிலையில் பிரான்சுக்கு எதிரான காலிறுதிபோட்டிக்கி திரும்புவாரா என சந்தேகம் எழுந்துள்ளது.  

இங்கிலாந்து முன்கள வீரர் ரஹீம் ஸ்டெர்லிங், ஞாயிற்றுக்கிழமை செனகலுக்கு எதிரான போட்டியில் விளையாடாமல் நாடு திரும்பியிருந்தார்.இப்போட்டியில் இங்கிலாந்து 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

ஸ்டெர்லிங்,குடும்பத்தினர் வீட்டிலிருந்த போது ஆயுதமேந்திய கொள்ளையர்கள் வீட்டின் உள்ளே நுழைந்துள்ளனர். இதனைத்தொடர்ந்து இங்கிலாந்து சென்ற அவர் செனகலுக்கு எதிரான போட்டியில் விளையாடவில்லை. சனிக்கிழமை பிரான்சுக்கு எதிரான காலிறுதிப் போட்டிக்கான நேரத்தில் அவர் திரும்புவாரா என்பதில் சந்தேகம் உள்ளது.

ஸ்டெர்லிங் பிரான்சுக்கு எதிரான காலிறுதிக்கு திரும்புவாரா அல்லது அரையிறுதிக்கு திரும்புவாரா என்று கேட்டபோது, கரேத் சவுத்கேட் அவர் உறுதியாக தெரியவில்லை என்று சின்ஹுவா தெரிவித்தார்.மேலும் அவர் கூறுகையில் இந்நேரத்தில் அவர் குடும்பத்தினருடன் இருக்க வேண்டிய  சூழ்நிலை,அதனால் அவரை எந்த அழுத்தத்திற்கும் உட்படுத்த நாங்கள்  விரும்பவில்லை.

“நாங்கள் காத்திருந்து பார்க்க வேண்டும். இந்த நேரத்தில், தெளிவாக அவர் தனது குடும்பத்துடன் இருப்பதே முதன்மையானது. நாங்கள் அதற்கு ஆதரவளிக்கப் போகிறோம், மேலும் அவருக்குத் தேவையான நேரத்தை அவருக்கு விட்டுவிடுவோம் என்று கூறியுள்ளார்.

author avatar
Dinasuvadu Web

Leave a Comment