அரியலூரில் ஒரே நாளில் 18 பேருக்கு கொரோனா உறுதி !

அரியலூரில் ஒரே நாளில் 18 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில், நேற்று (மே2) மட்டும் 231 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால்  மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2757 ஆக அதிகரித்துள்ளது. நேற்று மட்டும் 29 பேர் குணமடைந்துள்ள நிலையில் தமிழகத்தில் 1,341 ஆக உயர்ந்துள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இந்நிலையில், சென்னையில் நேற்று ஒரே நாளில் 174 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் மொத்தம் 1257ஆக உயர்ந்துள்ளது. இதேப்போல அரியலூரில் நேற்று 18 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் மொத்தம் 26ஆக உயர்ந்துள்ளது.

author avatar
Vidhusan