முதல்வருக்கு பாராட்டு விழா – விவசாய சங்கத்தினர் அழைப்பு.!

திருச்சி மன்னார்புரம் அரசு சுற்றுலா மாளிகையில் முதலமைச்சர் பழனிசாமியை விவசாய சங்கத் தலைவர்கள் நேரில் சந்தித்தனர். அப்போது காவிரி பாசன மாவட்டங்களை பாதுக்காக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டதற்கு நன்றி தெரிவித்த விவசாய சங்கத்தினர், வரும் மார்ச் 7ம் தேதி நடைபெற உள்ள பாராட்டு விழாவிற்கு முதல்வருக்கு அழைப்பு கொடுத்தனர்.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த, காவிரி பாசன விவசாயிகள் சங்கம் செயலாளர் மன்னார்குடி ரெங்கநாதன், தமிழக அரசின் சிறப்பு வேளாண் மண்டல அறிவிப்பு, விவசாயிகளை பாதுகாக்கும் நடவடிக்கை என பெருமிதம் தெரிவித்தார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்