மத்திய அரசின் கீழ் செயல்படும் ஹிந்துஸ்தான் காப்பர் நிறுவனத்தில் சம்பளத்துடன் அப்ரன்டீஸ் பயிற்சிக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது.
மத்திய அரசின் கீழ் செயல்படும் ஹிந்துஸ்தான் காப்பர் நிறுவனத்தில் அப்ரன்டீஸ் பயிற்சி பணிகளுக்கு வேலைவாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த காலிப்பணி இடங்களுக்கு விண்ணப்பிக்க கடந்த 06-ஜூலை-2023 முதல் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளது. கடைசி தேதியாக ஆகஸ்ட் 08ஆம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான முழு விவரம் இதோ..
பணியின் விவரங்கள் மற்றும் காலியிடங்கள் :
- தொழில்முறை ஆஃப்ரன்டீஸ் – 184 காலிப்பணியிடங்கள்.
சம்பளம் விவரம் – அரசு விதிகளின் படி வழங்கப்படும்.
கால அளவு – ஒரு வருடம்
வயது வரம்பு :
- குறைந்தபட்சம் 18 வயது முதல் 24 வயது வரை.
- அரசு இடஒதுக்கீட்டின் படி வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை :
- மதிப்பெண் அடிப்படையில் தகுதியான நபர்கள் பணியமர்த்தப்படுவர்.
விண்ணப்பம் தொடங்கிய தேதி – 06 ஜூன் 2023.
விண்ணப்பிக்க கடைசி தேதி – 08 ஆகஸ்ட் 2023.
விண்ணபக்கட்டணம் – குறிப்பிடப்படவில்லை .
விண்ணப்பிக்கும் முறை :
- அரசு அப்ரன்டீஸ் பயிற்சி மையத்தின் அதிகாரபூர்வ தளமான www.apprenticeshipindia.gov.in/க்கு செல்ல வேண்டும்.
- அதனை தொடர்ந்து அந்த பக்கத்தில் HCL (Hindustan Copper Limited) அப்ரண்டீஸ் பணிக்கு விண்ணப்பிக்க வேண்டுமோ அதற்கான லிங்கை கிளிக் செய்ய வேண்டும்.
- பின்னர், அதில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான ஆவணங்களை பூர்த்தி செய்து, அதற்கான நகலை சேர்த்து இறுதி தேதிக்குள் வந்து சேரும்படி தபால் மூலம் திருநெல்வேலி மாவட்டத்தில் கூடங்குளம் அணுமின் நிலையதிற்கு அனுப்ப வேண்டும்.
- அதில் தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள் குறித்த விவரங்கள் 19 ஆக்ஸ்ட 2023இல் வெளியிடப்படும்.
- அதன் பின்னர் அவர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டு பின்னர் பணியமர்த்தப்படுவர்.