ஆர்டர் செய்தது ஆப்பிள் போன்…! ஆனால் டெலிவரி வந்ததோ ஆப்பிள் ஜூஸ்…!

ஆப்பிள் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ தளத்தில் ஐபோன் 12 ஒன்றை ஆர்டர் செய்த பெண்ணுக்கு, ஆப்பிள் ஜூஸ் வீடு தேடி வந்துள்ளது. 

இன்று தொழில்நுட்ப வளர்ச்சி பெருகி உள்ளதால் அதிகமான பொருட்களை மக்கள் இணையத்தில் ஆர்டர் செய்து வாங்குவதை வழக்கமாக கொண்டுள்ளனர். அதிலும்  சம்மந்தமான பொருட்களை வாங்குவது பலரின் கனவாக இருந்து வருகிறது.  இணையத்தில் ஆர்டர் செய்து வாங்குவதால், பலன்கள் இருந்தாலும், சில ஏமாற்றங்களும் காணப்படுகிறது.

அந்த வகையில் சீனாவை சேர்ந்த பெண்ணொருவர் ஆப்பிள் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ தளத்தில் ஐபோன் 12 ஒன்றை ஆர்டர் செய்துள்ளார். இப்பெண் ஐபோன்களை ஆர்டர் செய்த நிலையில், இவருக்கு வந்ததோ ஆப்பிள் ஜூஸ்.  இதை கண்டு அதிர்ச்சி அடைந்த பெண் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனை தொடர்ந்து, டெலிவரி நிறுவனம் இதற்கு பொறுப்பேற்று கொண்டு விசாரணை மேற்கொண்டு வருகிறது. இப்பெண் இந்த இந்த போனுக்காக ரூ.1 லட்சத்திற்கும் மேல் செலவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.