கடலூரில் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை..!

கடலூரில் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில், ரூ.3 லட்சம் பறிமுதல். 

கடலூர் மாவட்டம் அண்ணா கிராம பகுதியில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். பொதுமக்களிடம் லஞ்சம் பெறுவதாக கிடைத்த தகவல் அடிப்படையில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த சோதனையில், கணக்கில் வராத ரூ.3 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த பணம் ஒப்பந்தக்காரர்களிடம் இருந்து லஞ்சமாக பெறப்பட்ட பணமாக இருக்கலாம் என்ற கோணத்தில், லஞ்சஒழிப்புத்துறை அதிகாரிகள் விசாரணையில் ஈடுபட்டு வருகிறனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.