மீண்டும் ஓர் ஆணவக்கொலை.?! மருமகனை நடுரோட்டில் வெட்டி கொலை செய்த மாமனார்.!

கிருஷ்ணகிரியில் தனது மகள் காதல் திருமணம் செய்ததால், திருமணம் செய்த நபரை நடு ரோட்டில் பெண்னின் தந்தை வெட்டி கொலை செய்துள்ளார். 

கிருஷ்ணகிரி மாவட்டம் கிட்டம்பட்டி கிராமத்தை சேர்ந்த ஜெகன் எனும் 28 வயது இளைஞரும், அவதானப்பட்டி அருகே உள்ள முழுக்கான் கொட்டாய் பகுதியை சேர்ந்தவ சரண்யா எனும் 22 வயது இளம்பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். இருவரும் ஒரே சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது .

காதல் திருமணம் :

இந்த காதல் விவகாரத்துக்கு சரண்யாவின் அப்பா சங்கர் உட்பட பெண்ணின் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். இந்த எதிர்ப்பையும் மீறி கடந்த மாதம்  காதல் ஜோடி கோவிலில் திருமணம் செய்துகொண்டு ஜெகன் வீட்டு சம்மதத்தோடு வாழ்ந்து வந்துள்ளனர்.

நடுரோட்டில் கொலை :

இதனால் கோபமடைந்த சரண்யாவின் தந்தை சங்கர் திட்டமிட்டு, டைல்ஸ் ஓட்டும் வேலைக்கு ஜெகன் கிருஷ்னகிரி அணை அருகே மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்த போது வழிமறித்து அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் கொண்டு தாக்கியுள்ளார்.

சாலை மறியல் :

நேற்று நண்பகலில் இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. சங்கர் உட்பட கூட்டாளிகள் பயங்கரமாக தாக்கியதில் ஜெகன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இந்த சம்பவத்தை தொடர்ந்து ஜெகனின் உறவினர்கள் சம்பவ இடத்திற்கு வந்து குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சங்கர் சரண் :

இதனை தொடர்ந்து காவல் துறையினர் ஜெகன் கொலை சம்பந்தமாக சரண்யாவின் அப்பா சங்கர் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்தனர். இதில் சங்கர் காவல்துறையில் நேரடியாக சரண் அடைந்துள்ளார். மற்றவர்களை தேடும் பணியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment