அங்கித் திவாரி ஜாமின் மனு- இன்று உத்தரவு..!

சொத்துகுவிப்பு தொடர்பான வழக்கில் இருந்து விடுவிக்க மருத்துவர் சுரேஷ் பாவிடம் லஞ்சம் பெற்ற அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி டிசம்பர் 1 -ம் தேதி அன்று கைது செய்யப்பட்டார். மருத்துவர் சுரேஷ் பாபு மீதான வழக்கை முடித்து தருவதாக கூறி முதலில் ரூ.20 லட்சம் வாங்கிய நிலையில் மீதமுள்ள ரூ.20 லட்சத்தை வாங்கியபோது திண்டுக்கல்லில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் அங்கித் திவாரி சிக்கினார்.

15 மணி நேர விசாரணைக்கு பின் திண்டுக்கல் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் அங்கித் திவாரியை லஞ்ச ஒழிப்பு போலீசாரால் ஆஜர்படுத்தப்பட்டு அவர் மதுரை சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கிடையே அங்கித் திவாரி திண்டுக்கல் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவா் நீதிமன்றம், உயா்நீதிமன்ற மதுரைக்கிளையில் ஜாமீனில் கேட்டு மனுத்தாக்கல் செய்தார். அவரது ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்திய தேர்தல் அதிகாரிகள் இன்று சென்னை வருகை..!

இந்தநிலையில்,அங்கித் திவாரி தரப்பில் அவரது வழக்கறிஞர் 2-வது முறையாக திண்டுக்கல் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவா் மன்றத்தில் கடந்த மாதம் 30-ஆம் தேதி மனு தாக்கல் செய்தாா். கடந்த 1-ஆம் தேதிக்கு இந்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போது போலீஸாா் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜாமீன் வழங்கக் கூடாது என்று வாதிட்டார்.

இதைத்தொடர்ந்து, வழக்கு விசாரணை இன்று ஒத்திவைக்கப்பட்டது.  இதனால், அமலாக்கத்துறை அங்கித் திவாரி இரண்டாவது முறையாக தாக்கல் செய்த மனு மீது திண்டுக்கல் நீதிமன்றம் இன்று உத்தரவிட உள்ளது.

author avatar
murugan

Leave a Comment