12-ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்தும், 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு எவ்வாறு தேர்ச்சி வழங்குவது என்பது குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகள், நீட் மற்றும் ஜேஇஇ நுழைவுத் தேர்வுகள் நடத்தப்படாமல் உள்ளது. இது குறித்து நேற்று மத்திய அரசு அனைத்து மாநில கல்வித்துறை அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியது. அக்கூட்டத்தில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி அகியோர் கலந்துகொண்டனர்.
ஆலோசனைக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு கட்டாயமாக நடைபெறும். தமிழக அரசின் நிலைப்பாடும் அது தான். தமிழகத்தின் நிலைப்பாடு குறித்து செவ்வாய்க்கிழமைக்குள் தெரிவிப்பதாககூறியுள்ளோம் என தெரிவித்தார்.
இந்நிலையில், சென்னை தலைமை செயலகத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் தலைமையில் பள்ளிக்கல்வித் துறை நடவடிக்கைகள் குறித்தும், 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்தும், 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு எவ்வாறு தேர்ச்சி வழங்குவது என்பது குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் செயலாளர் தீரஜ் குமார், ஆணையர் நந்தகுமார் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.
IPL2024: பஞ்சாப் அணி 18.4 ஓவரில் 2 விக்கெட்டைகள் இருந்து 262 ரன்கள் எடுத்தனர். இதனால் பஞ்சாப் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர். இன்றைய போட்டியில்…
Devon Conway : நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் இந்த விதி நல்லது தான் என ஆதரித்துள்ளார் சிஎஸ்கே அணியின் வீரரான டேவான் கான்வே. ஐபிஎல் தொடரின்…
Priya Anand : நடிகை பிரியா ஆனந்த் படுகிளாமராக நடித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக…
Inga Naan Thaan Kingu : சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள இங்க நான் தான் கிங்கு படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. வடக்குப்பட்டி ராமசாமி படத்தின் வெற்றியை தொடர்ந்து…
Realme C65 5G : ரியல்மி நிறுவனம் தனது அடுத்த 5ஜி ஸ்மார்ட் போனான ரியல்மி சி65 5ஜி வெளியிட்டது. ரியல்மி நிறுவனம் இந்த ஆண்டில் அடுத்தடுத்து…
DeepFake : 75 சதவீத இந்தியர்கள் போலியான டீப்ஃபேக் வீடியோக்களை பார்த்துள்ளனர் என ஓர் ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது. தொழில்நுட்ப உலகில் அதிவேகமாக வளர்ந்து வரும் AI எனும்…