10 லட்சம் கையெறி குண்டுகளை வாங்கி குவிக்கும் இந்தியா!!

இந்திய ராணுவத்திற்கு 10 லட்சம் கையெறி குண்டுகளை வாங்குவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இது குறித்து வெளியான தகவலானது;

நாக்பூரை சேர்ந்த எக்னாமிக் எக்பிளொசிவ் லிமிடெட் என்கிற நிறுவனத்திற்கும் பாதுக்காப்பு துறை அமைச்சகத்திற்கும் இடையே இந்திய ராணுவத்திற்கு 10 லட்சம் கையெறி குண்டுகளை வாங்குவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.

மேக் இன் இந்தியா திட்டத்திற்கு ஊக்கமளிக்கும் விதத்தில் 409 கோடி ரூபாய் மதிப்பில் இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்படுவதாகவும் டிஆர்டிஒ வடிவமைத்த கையெறி குண்டுகளை எக்னாமிக் எக்பிளொசிவ் லிமிடெட் நிறுவனம் தயாரிக்க உள்ளது. தற்காப்பு மற்றும் தாக்குதல் என பல பயன்பாடுகளுக்கு ஏற்ற வகையில் கையெறி குண்டுகள் தயாரிக்கப்படும் என்று பாதுகாப்பு துறை அமைச்சகம்  தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



author avatar
Kaliraj