ஆழ்துளை கிணற்றில் விழுந்த 8 வயது சிறுவன் மீட்பு..! சிகிச்சை பலனின்றி உயிரிழந்த பரிதாபம்.!

மத்திய பிரதேசத்தில் 55 அடி ஆழ்துளை கிணற்றில் இருந்து 8 வயது சிறுவன் 4 நாட்களுக்கு பிறகு மீட்கப்பட்டான். 

மத்திய பிரதேசத்தில் உள்ள பெதுல் கிராமத்தில் பெற்றோர்களுடன் வசித்து வந்த சிறுவன் தன்மய் சாஹு, கடந்த செய்வாய் கிழமை அவனது கிராமத்தில் விளையாடிக்கொண்டிருக்கும் பொது அங்கிருந்த ஆழ்துளை கிணற்றில் விழுந்துள்ளான். 400 அடி ஆழமுள்ள இந்த கிணற்றில் 55 அடி ஆழத்தில் சிக்கிக்கொண்டான்.

தகவல் தெரிந்து வந்த ஊர்காவல் படையினர் மற்றும் உள்ளூர் காவல் துறையினர் சிறுவனை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டு வந்துள்ளனர். கிணற்றில் சிக்கி கொண்ட சிறுவனை மீட்பு படையினர் கடந்த 4 நாட்களாக முயற்சி செய்து சனிக்கிழமை வெளியே எடுத்துள்ளனர்.

மீட்கப்பட்ட சிறுவன் பெதுல் மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டான். சிகிச்சை பலனின்றி சிறுவன் தன்மய் சாஹு உயிரிழந்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

author avatar
செந்தில்குமார்
நான் செந்தில்குமார், எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்கிறேன். செய்தி ஊடகத்தின் மீதான ஆர்வத்தினால், ஒரு வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். டெக்னாலஜி, க்ரைம், விளையாட்டு, தமிழ்நாடு முதல் உலக செய்திகள் வரை அனுபவம் உள்ளது.

Leave a Comment