அமமுக குள்ளநரிகள் கூட்டம்., அதிமுக சிங்கங்கள் இருக்கின்ற கூட்டம் – அமைச்சர் ஜெயக்குமார்

அதிமுகவில் சசிகலா, தினகரனை சேர்க்கப்பட வாய்ப்பு இல்லை என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் காலத்தில் இருந்த எழுச்சியை தற்போதும் காண முடிகிறது என்று அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்ய தலைமை செயலகத்திற்கு வந்தர்களை காண்பித்து தெரிவித்துள்ளார்.

இந்த எழுச்சியை பார்க்கும் போது எம்ஜிஆர், ஜெயலலிதாவின் அலை தமிழகத்தில் வீசுகின்ற நிலையில், எதிர்க்கட்சிகள் எல்லாம் காணாமல் போய் எல்லா தொகுதிகளிலும் அதிமுக தலைமையிலான கூட்டணி ஒரு மாபெரும் வெற்றி பெற்று மீண்டும் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் ஆட்சியை அமைக்கும் என கூறியுள்ளார்.

விருப்ப மனு அளிக்கின்ற வேகத்தை பார்க்கும்போது, எங்கள் சக்தியை காட்டிலும், இந்த இமயமலை என்ற மாபெரும் சக்தியை காட்டிலும் உலகத்தில் வேறு எந்த சக்தியும் இல்லை என்கிற அளவிற்கு, வரலாறு படைக்க இருக்கும் அதிமுக. எனவே மீண்டும் அம்மாவின் ஆட்சி மலரவேண்டும் என்று ஒருமித்த கருத்துடன் மக்களும், நாங்களும் பயணித்து வருகிறோம் என தெரிவித்துள்ளார்.

எங்கள் கட்சி விவகாரத்தில் பாஜக தலையிடுவது கிடையாது. ஒரு பெரிய அளவுக்கு வதந்தியை கிளப்பிவிடுகிறார்கள். முதல்வர் கூறியது போல், அமமுக தினகரன் மற்றும் சசிகலா அதிமுகவில் இணைவதற்கான எந்த சத்தியமும் இல்லை என்றும் அவர்களை சேர்ப்பதற்கு 100 சதவீதம் வாய்ப்புயில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இதுதான் உறுதியான நிலையில், இதில் எந்த மாற்றமும் கிடையாது. நேற்று தினகரன் கூறிருந்தார், அவர்கள் தலைமையில் கூட்டணி என்று, இது ஒரு நகைசுவைகையாக தான் இருக்கிறது என அமைச்சர் விமர்சித்துள்ளார். குள்ளநரிகள் கூட்டமாக இருப்பது அமமுக, சிங்கங்கள் கூட்டமாக இருக்கின்றது அதிமுக என கூறிய அவர், சிங்கங்கள் எங்கே இருக்கு, குள்ளநரிகள் எங்கே இருக்கு இது எப்படி என விமர்ச்சித்துள்ளார்.

தினகரனின் பேச்சு ஒரு நகைச்சுவையாகத் தான் மக்கள் எடுத்துக்கொள்வார்கள். கட்சியை பொறுத்தளவில் கொள்கை வேறு, கூட்டணி வேறு, எங்களது கூட்டணியில் பாஜக ஒரு அங்கம், எங்கள் தலைமையில் அவர்கள் இருக்கின்றார்கள். ஆகையால், கட்சியின் உள் விவகாரத்தில் தலையிடாமல் தான் பாஜக இருக்கிறது. அவர்கள் அப்படி கூறியிருந்தாலும், அதனை நாங்கள் நிராகரித்துவிட்டோம் என கூறியுள்ளார்.

பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Recent Posts

IPL2024: வரலாறு சாதனை… சிக்ஸர் மழையால் பஞ்சாப் அபார வெற்றி..!

IPL2024: பஞ்சாப் அணி 18.4 ஓவரில் 2 விக்கெட்டைகள் இருந்து 262 ரன்கள் எடுத்தனர். இதனால் பஞ்சாப் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர். இன்றைய போட்டியில்…

50 mins ago

‘இந்த விதியை சேர்த்தது .. ரொம்பவே முக்கியம் தான்’ !!சிஎஸ்கே அணியின் கான்வே ஓபன் டாக் !!

Devon Conway : நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் இந்த விதி நல்லது தான் என ஆதரித்துள்ளார் சிஎஸ்கே அணியின் வீரரான டேவான் கான்வே. ஐபிஎல் தொடரின்…

4 hours ago

பேட் ரூம் காட்சியில் படு கிளாமராக நடித்த பிரியா ஆனந்த்! அதுவும் அந்த புது படத்திலா?

Priya Anand : நடிகை பிரியா ஆனந்த்  படுகிளாமராக நடித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக…

4 hours ago

காமெடி வேற லெவல்! சிரிக்க வைக்கும் ‘இங்க நான் தான் கிங்கு’ டிரைலர்!

Inga Naan Thaan Kingu : சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள இங்க நான் தான் கிங்கு படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. வடக்குப்பட்டி ராமசாமி படத்தின் வெற்றியை தொடர்ந்து…

5 hours ago

பட்ஜெட் விலையில் அசத்தல் 5G ஸ்மார்ட்போன் !! ரயில்மி சி 65யின் அம்சம், விலை விவரம் இதோ !!

Realme C65 5G : ரியல்மி நிறுவனம் தனது அடுத்த 5ஜி ஸ்மார்ட் போனான ரியல்மி சி65 5ஜி வெளியிட்டது. ரியல்மி நிறுவனம் இந்த ஆண்டில் அடுத்தடுத்து…

5 hours ago

அதிர்ச்சி ரிப்போர்ட்.! 75% பேர் போலியான DeepFake வீடியோக்களை பார்த்துள்ளனராம்..!

DeepFake : 75 சதவீத இந்தியர்கள் போலியான டீப்ஃபேக் வீடியோக்களை பார்த்துள்ளனர் என ஓர் ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது. தொழில்நுட்ப உலகில் அதிவேகமாக வளர்ந்து வரும் AI எனும்…

5 hours ago