கொரோனா பாதிப்பு-மத்திய அமைச்சர்களுடன்அமித் ஷா ஆலோசனை

உலகை உலுக்கிவரும் கொரோனா வைரஸின் தாக்கம் நம் நாட்டையும் தாக்கி வருகிறது. நாளுக்கு நாள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்துகொன்டே இருக்கிறது. இதனால், ஊரடங்கும் கடுமையாக அமல்படுத்தப்பட்டு வருகிறது.

இதுவரை இந்தியாவில் 4,421 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனாவால் 114 பேர் உயிரிழந்துள்ளனர்.இதற்கு பிரதமர் மோடி அமைச்சர்களுடன் ஆலோசனை மேற்கொண்ட நிலையில் கொரோனா பாதிப்பு குறித்து மத்திய அமைச்சர்களுடன் உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.