#BREAKING: தேர்தல் நெருங்க நெருங்க கூட்டணி மாறலாம்.. பொன் ராதாகிருஷ்ணன்..!

சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்க நெருங்க கூட்டணிகள் மாற வாய்ப்புள்ளது என முன்னாள் அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இப்போது நாடாளுமன்ற தேர்தலுக்காக அமைக்கப்பட்ட கூட்டணி எனவும் , எதிர்காலத்தில் திமுக, அதிமுக உள்ளிட்ட எந்த கட்சியுடனும் கூட்டணி அமையலாம் என்றும் தெரிவித்தார்.

தமிழகத்தில் 2021சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பின் பாஜக அங்கம் வகிக்கும் ஆட்சி அமையும் என அவர் தெரிவித்தார். இப்போது வைக்கப்பட்டுள்ள கூட்டணி பாராளுமன்ற தேர்தலுக்காக அமைக்கப்பட்ட கூட்டணி, சட்டமன்றத்துக்கு கூட்டணி அமைக்கப்படும். அது அதிமுகவுடன் இருக்கலாம், திமுகவுடன் இருக்கலாம் ,இரண்டும் இல்லாமல் கூட இருக்கலாம் என கூறினார்.

முதல்வர் வேட்பாளர் என்பது கூட்டணி உடன்பாட்டிற்கு பின் அறிவிக்க வேண்டிய விஷயம் என அவர் தெரிவித்தார். தற்போது, பாஜக அதிமுக கூட்டணியில் உள்ளது. இன்று  காலை அதிமுக தலைமையகத்தில் கட்சியின்  ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்  முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
murugan