போலி மருந்துகளை தடுக்க அதிரடி திட்டம்.! இனி QR கோடு கட்டாயம்.!

போலி மருந்துகளை தடுக்க அரசு புதிய திட்டத்தை கையெலெடுத்துள்ளது. அதாவது, இந்தியாவில் தயாரிக்கப்படும் மருந்துகள், இறக்குமதி செய்யப்படும் மருந்துகள் அனைத்திலும் QR கோடு பதிவு செய்யவேண்டும் என அரசு முடிவு எடுத்திருப்பதாக கூறப்படுகிறது.

இதன் மூலம் கள்ளச்சந்தையில் விற்பனையாகும் போலி மருந்துகள் தடுக்கப்படும் என கூறப்படுகிறது. மேலும், QR கோடு பதிவு மூலம் மருந்துகளின் தெளிவான உள்ளடக்கம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை பற்றி பொதுமக்கள் எளிதாக தெரிந்து கொள்ள முடியும் எனவும் கூறப்படுகிறது.

ஆனால், இந்த QR கோடு பாதிப்பு திட்டம் சில ஆண்டுகளுக்கு முன்னரே கூறப்பட்டதாம். ஆனால், சில மருந்து கம்பெனிகள் எதிர்ப்பு தெரிவிக்கவே இந்த திட்டம் செயல்படுத்த முடியாமல் போனதாம்.

ஆனால், தற்போது மத்திய சுகாதார துறை அமைச்சகம் இந்த QR  கோடு பாதிப்பு பற்றி தீவிரமாக ஆலோசித்து வருகிறதாம். அதனால், விரைவில்,  அனைத்து மருந்துகளிலும் QR கோடு பதிக்கும் அறிவிப்பு அறிவிக்கப்படும் என கூறப்படுகிறது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.