கொரோனாவை தடுக்க சிறுவர்களுக்கு மதுபானம்! இணையத்தில் வைரலாகும் வீடியோ!

கொரோனாவை தடுக்க சிறுவர்களுக்கு மதுபானம்.

முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ், தொடர்ந்து பல நாடுகளில் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. இந்த வைரஸை கட்டுப்படுத்த உலக நாடுகள் பல நடவடிக்கைகள் மேற்கொண்ட போதிலும், இந்த வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து தான் வருகிறது.

இந்நிலையில், ஒடிசாவில் மல்கன்கிரி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் கொரோனாவை தடுக்கும் பொருட்டும் சிறுவர்களுக்கு பொதுமக்கள் மதுபானம் வழங்கிய நிகழ்வு பலரையும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.