ஆண்டவர் தரிசனத்தை பார்க்க சென்ற அஜித் குடும்பத்தார்.!

சினிமா ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த கமல்ஹாசனின் விக்ரம் திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது.4 வருடங்கள் கழித்து கமல்ஹாசனின் திரைப்படம் வெளியானதால் ரசிகர்கள் படத்தை கொண்டாடி தீர்த்தனர். திரையரங்குகளின் முன்னாள் ஆட்டம், பாட்டம் கமல் போஸ்டருக்கு பால் அபிஷேகம் செய்து நேற்று கலக்கிவிட்டனர்.

ரசிகர்கள் எதிர்பார்த்ததை போல விக்ரம் படமும் அதிரடி ஆக்சன் காட்சிகளை கொண்டிருந்ததால் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துவிட்டது என்றே கூறலாம். படத்தை பார்த்த ஒவ்வொரு ரசிகர்களும் 4 ஆண்டுகளுக்கு பிறகு ஆண்டவரை பார்க்கிறேன். படம் மிகவும் அருமையாக இருக்கிறது விக்ரம் 3 பார்ட்டுக்கு வெயிட்டிங் என தெரிவித்து வருகிறார்கள்.

இதற்கிடையில், நடிகர் அஜித்குமாரின் மனைவியும், நடிகையுமான ஷாலினி அஜித் தனது மகள் அனோஷ்காவுடன்  திரையரங்கிற்கு சென்று விக்ரம் படத்தை பார்க்க சென்றுள்ளார். அவர் படத்தை பார்க்க உள்ளே செல்லும் போதே படம் எப்படி இருக்கிறது என்று பத்திரிகையாளர் ஒருவர் கேட்க “நாங்கரெண்டு பேருமே படத்த பாக்கல” என்று சிரித்தபடியே கூறியுள்ளார்.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.

Leave a Comment