கஜா பாதிப்புக்கு களமிரங்கிய நடிகர் அஜித்….!!!நிவாரண நிதி அறிவிப்பு..!

கஜா புயல் 4 மாவட்ட மக்களின் வாழ்க்கையை புரட்டிபோட்டுள்ளது.மக்கள் தங்கள் அடிப்படை தேவை பொருட்கள் இன்றி  தவித்து வருகின்றனர்.இந்த புயலில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டம் நாகை அம்மாவட்டமே தனி தீவாக காட்சியளிக்கிறது. இன்னும் அம்மாட்டத்தில் பல கிராமங்கள் தனித்து விடப்பட்டுள்ள தீவாக மாறியுள்ளது.அங்குள்ள மக்கள் எப்படி,இருக்கிறார்கள் என்ற கேள்வியே கேள்விக்குறியாகி உள்ளது.மேலும் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.இந்த புயல் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.மக்கள் தற்போது மின்சாரம் இன்றியும்,அடிப்படை தேவைகள் இன்றியும் தவித்து வருகின்றனர்.

இந்நிலையில் பல்வேறு தரப்பினர் உதவி கரம் நீட்டி வருகின்றனர்.மக்கள்,தன்னார்வ தொண்டு நிறுவனங்கள்,இளைஞர்கள், நடிகர்கள் என அனைவரும் உதவிவருகின்றனர். இந்நிலையில் கஜா புயல் நிவாரண பணிகளுக்காக திரைப்பட நடிகர் அஜித் சார்பில் தமிழக அரசின்  நிவாரண நிதிக்கு ரூ.15 லட்சம் நிதி வழங்கி உள்ளார்.

DINASUVADU

author avatar
kavitha

Leave a Comment