இந்தியர்களை மீட்க இத்தாலிக்கு பறக்கும் ஏர் இந்தியா விமானம்.!

கொரோனா பாதித்த, இத்தாலியில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க ஏர் இந்தியா விமானம் நாளை இத்தாலி புறப்படுகிறது என மத்திய விமான போக்குவரத்துத் துறை இணைச் செயலாளர் ரூபனா அலி தெரிவித்துள்ளார். இந்த நிலையில் சீனாவில் தொடங்கி இந்திய வரை பரவியுள்ள கொரோன வைரஸ் மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் உலக நாடுகள் முழுவதும் பல்வேறு கட்டுபாடுகள் தீவிரமாக எடுக்கப்பட்டு வருகின்றனர். 

இந்தியாவில் இதுவரை 81 பேருக்கு இந்த வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், வெளிநாடுகளில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை மீட்டு வரும் பணியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. மேலும் வைரஸ் பரவாமல் இருக்க பள்ளிகள் மூடப்பட்டுள்ளன, விளையாட்டு போட்டிகள் ரத்து செய்யப்பட்டு வருகின்றன. அதேபோல் கலாசார மற்றும் கலை தொடர்பான நிறுவனங்களும் மூடப்பட்டு வருகின்றன. மேலும் பொது இடங்களில் மக்கள் கூட்டமாக கூட கூடாது என்று பல கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது இந்திய அரசு. 

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்