அதிமுக மத்திய அரசை எதிர்த்துதான் இடைத்தேர்தலில் போட்டியிடுகிறது- மாஃபா பாண்டியராஜன்

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ ஈவேரா மறைவுக்கு பிறகு, அத்தொகுதிக்கு வரும் 27ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.இடைத்தேர்தலில்  அதிமுக, காங்கிரஸ், தேமுதிக, நாம் தமிழர் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் என மொத்தம் 77 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசுவுக்காக ஆதரவு கேட்டு முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பிரச்சாரத்தில் ஈடுபட்ட போது செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது பேசிய அவர் ஈரோடு இடைத்தேர்தலில் நாங்கள் மத்திய அரசை எதிர்த்து தான் போட்டி இடுகின்றோம்.அதிமுக மத்திய அரசுக்கு அடிமை சேவகம் செய்யக்கூடியது என்று கடந்த காலங்களில் திமுக பதியவைத்தது ,ஆனால் இந்த தேர்தலில் அது எடுபடாது.

ஏனென்றால் அவர்களை எதிர்த்து நின்றுதான் நாங்கள் இங்கு எல்லா வேலைகளையும் செய்து கொண்டு இருக்கிறோம்.பலதரப்பட்ட மக்கள் எங்களுக்கு ஆதரவு தருகிறார்கள் அதனை நாங்கள் தடை செய்ய முடியாது.மற்றபடி இந்த இடைத்தேர்தலில் அதிமுக தனது சொந்தக்காலில் தான் நின்று தான் போட்டியிடுகிறது அதை எவராலும் மறுக்க இயலாது.

எங்களுக்கு ஆதரவு அளிப்பவர்களின் சித்தாந்தங்களை வைத்து எங்களை எடைபோட வேண்டாம் என முன்னாள் அமைச்சர் மா.பாண்டியராஜன் செய்தியாள்களிடம் தெரிவித்தார்.

author avatar
Dinasuvadu Web

Leave a Comment