ரஷ்ய தூதரகம் அருகே பெரும் குண்டுவெடிப்பு.! 2 ரஷ்யர்கள் உட்பட 20 பேர் உயிரிழப்பு.!

ஆப்கான் தலைநகர் காபூலில் இன்று காலை குண்டுவெடிப்பு நடந்துள்ளது. அதில் இரண்டு ரஷ்யர்கள் உட்பட 20 பேர் உயிரிழந்துள்ளனர். 

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இன்று காலை குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இந்த குண்டுவெடிப்பானது காபூலில் உள்ள ரஷ்ய தூதரகத்தின் முன்னே நிகழ்ந்துள்ளது.

திங்கள் கிழமை காலை என்பதால் அங்கு கணிசமான ஆட்கள் இருந்துள்ளனர். ரஷ்யா தூதரகத்தில் இருந்த 2 ரஷ்யர்கள் உட்பட 20 பேர் உயிரிழந்துள்ளானர். அடையாளம் தெரியாத தீவிரவாதி ஒருவன் இந்த தாக்குதலை நடாத்தியுள்ளான் என முதற்கட்ட தகவல் கிடைத்துள்ளது.

இதையும் படியுங்களேன் – அண்ணா நூற்றாண்டு நூலகம் இந்தியாவின் பெருமை.!எழுத்துபூர்வமாக பதிவிட்ட டெல்லி முதல்வர்.!

இந்த குண்டுவெடிப்பு குறித்து பேசிய ரஷ்ய வெளியுறத்துறை, ‘ இந்த குண்டுவெடிப்பு மோசமானது. ஏற்கத்தக்கது அல்ல. மேலும் ரஷ்ய அதிகாரிகளுக்கு ஏதேனும் நடந்துள்ளதா என்பதை களத்தில் ஆராய்ந்து வருகிறோம் . ‘ எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment