யூடியூப் பார்த்து கருக்கலைப்பு- இளம்பெண் மருத்துவமனையில் அனுமதி..!

பெண் ஒருவர் தனது தானே கருக்கலைப்பு செய்ய முயன்றதால் அவரது உடல்நிலை மோசமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

மகாராஷ்டிராவில் உள்ள நாக்பூரில் 25 வயதான பெண் ஒருவர் தனது கருவை கருக்கலைப்பு செய்ய முயன்றதால் அவரது உடல்நிலை மோசமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து போலீசார் கூறுகையில், அந்த பெண்ணின் ஆண் நண்பர் ஒருவருடன் பழகி வந்துள்ளார். திருமணம் செய்வதாக கூறி 2016 ஆம் ஆண்டு முதல் பல முறை இருவரும் நெருக்கமாக இருந்துள்ளனர்.

இதனால், அந்த பெண் கர்ப்பம் தரித்துள்ளார். இதுபற்றி ஆண் நண்பரிடம் அப்பெண் தெரிவித்துள்ளார். அப்போது, கருவை கலைத்துவிடும்படியும், மருத்துவமனைக்கு சென்றால் அனைவருக்கும் தெரிந்துவிடும் என்பதால் ரகசியமாக கருக்கலைப்பு செய்ய முடிவெடுத்து, அவரது ஆண் நண்பர் யூடியூப் வீடியோக்களைப் பார்த்து கருவை கலைக்கும்படி பெண்ணிடம் கூறியுள்ளார்.

தனக்கு தானே கருக்கலைப்பு செய்ய முயன்றபோது, அந்த பெண்ணின் உடல் நிலை மேசமானதால், அப்பெண்ணை அவரின் குடும்பத்தினர் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அவருடைய ஆண் நண்பர் யார் என்றும் விசாரித்து சோயுப்கான் (வயது 31) என்பவர் மீது கற்பழிப்பு வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டார் என போலீசார் தெரிவித்தனர்.

author avatar
murugan