முதல் முத்தத்திற்கு 10 மார்க்! அதுதான் அடுத்த கிஸ்-க்கு உதவுச்சு..நடிகை ரேஷ்மா ஓபன் டாக்!

தமிழ் சினிமாவில் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் என்ற படத்தில் புஷ்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை ரேஷ்மா. இவர் இந்த திரைப்படத்திற்கு பிறகு கோ 2, திரைக்கு வரத கதை, பேய் மாமா உள்ளிட்ட சில படங்களில் நடிக்கவும் செய்து இருக்கிறார். இருந்தாலும் இவருக்கு வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படம் கொடுத்த வரவேற்பை போல எந்த படமும் பெரிய அளவுக்கு வரவேற்பை கொடுக்கவில்லை.

இதன் காரணமாக அவர் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். இதில் கிடைத்த வரவேற்ப்பு காரணமாக ரேஷ்மாவுக்கு பாக்கிய லட்சுமி சீரியலில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பும் கிடைத்தது. அந்த சீரியலில் நடித்துக்கொண்டு ஒரு பக்கம் இருக்க மற்றோரு இளம் நடிகைகளுக்கு சவால் விடும் வகையில் கவர்ச்சியான புகைப்படங்களையும் வெளியிட தொடங்கினார்.

Abhirami : எனக்கு 17 வயசு இருக்கும்போது 40 வயசு பையனுக்கு…விருமாண்டி அபிராமி வேதனை!

அவருடைய கவர்ச்சி புகைப்படங்களுக்காகவே தனி ரசிகர்கள் கூட்டமும் இருக்கிறது என்று கூட சொல்லலாம். எந்த மாதிரி கவர்ச்சி புகைப்படங்கள் வேண்டுமென்றாலும் தைரியமாக வெளியிடும் ரேஷ்மா தன்னிடம் கேட்கப்படும் கேள்விகளுக்கும் மனம் திறந்து வெளிப்படையாகவே பதில் அளித்து விடுவார். அந்த வகையில், அண்மையில் பேட்டி ஒன்றில் காலத்து கொண்ட அவரிடம் முதல் முத்தம் குறித்து தொகுப்பாளர் கேள்வி கேட்டுள்ளார்.

அதற்கு நடிகை ரேஷ்மாவும் மனம் திறந்து பதில் அளித்துள்ளார்.  இது குறித்து பேசிய நடிகை ரேஷ்மா ” முதல் முத்தம் எனக்கும் நடந்திருக்கிறது. அது யார் என்று என்னால் சொல்ல முடியாது ஏனென்றால், அவர்கள் எல்லாம் என்னை விட்டு எப்போவோ சென்றுவிட்டார்கள். ஆனால், முதல் முத்தம் நன்றாக இருந்தது. அந்த முதல் முத்தம் தான் எனக்கு அடுத்ததாக முத்தம் கொடுக்க உதவியது.

முதல் முத்தம் இப்படிதான் நடந்தது…வெட்கத்தை விட்டு உண்மையை உளறிய கிஷோர் மனைவி.!!

ஆனால், என்னுடைய வாழ்வில் அந்த முதல் முத்தத்தை மட்டும் என்னால் மறக்கவே முடியாது. அந்த அளவுக்கு ரொம்பவே பிடித்திருந்தது. என்னுடைய அந்த முதல் முத்தத்திற்கு 10 மார்க் கொடுப்பேன்” என கூறியுள்ளார். அதனை தொடர்ந்து தொகுப்பாளர் எந்த வயதில் முதல் முத்தம் என்று கேட்க அதற்க்கு பதில் அளித்த ரேஷ்மா ” எல்லா வயதிலும் நான் முத்தம் கொடுத்திருக்கிறேன்.

சிறிய வயதாக இருக்கும் போது என்னுடைய அம்மா அப்பா பிறகு பெரிய வயதில் என்னுடைய முன்னாள் கணவர் என்னுடைய ஆண் நண்பர் என முத்தம் கொடுத்து இருக்கிறேன” என ரேஷ்மா பதில் அளித்தார். இந்த மாதிரி தனிப்பட்ட விஷயங்களை பற்றிய கேள்விக்கு தைரியமாக ரேஷ்மா பதில் அளித்துள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.