நடிகை அமலாபால் மீதான வரி ஏய்ப்பு வழக்கு முடித்து வைப்பு 7 ஆண்டுகள் சிறை செல்ல வாய்ப்பு !

வரி ஏய்ப்பு செய்த புகாரில் நடிகர் அமலாபால் மற்றும் பகத் பாசில் ஆகியோர் மீது தொடரப்பட்ட வழக்கு  முடிவுக்கு வந்துள்ளது

அமலாபால் மெர்சிடிஸ் பென்ஸ் சொகுசு காரை சுமார் 1.12  கோடிக்கு வாங்கினார் அவர் இந்த காரை வாங்க புதுச்சேரியில் தான் வாடகைக்கு குடியிருப்பதாக போலி ஆவணங்களை சமர்ப்பித்து வாங்கியுள்ளார். இதனால் அவர் 18 லட்சம் வரை வரி ஏய்ப்பு செய்ததாக கூறப்படுகிறது. இந்த மோசடியை கேரள மோட்டார் வாகன பிரிவு அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

இதனைத் தொடர்ந்து இந்த வழக்கை கேரள குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து கேரள உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர்.கார் பதிவு செய்தது புதுச்சேரியில் என்பதால் அவர்கள்தான் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என புதுச்சேரி போக்குவரத்து துறைக்கு கடிதம் அனுப்பி இந்த வழக்கை முடித்துக்கொண்டனர் கேரளா போலீசார் .

இவர் மட்டுமல்லாமல் பகத் பாசில் மற்றும் பாஜக எம்பியும் நடிகருமான  சுரேஷ் கோபியும் ஆகியோர்  இதுபோன்ற குற்றத்தில் ஈடுபட்டனர். பகத் பாசில் இந்த முறைகேடு பற்றி தனக்கு  தெரியாது என்று கூறி அதற்கான அபராதத் தொகையை வரியை செலுத்தினார். இதனால் அவரது வழக்கு முடிவுக்கு வந்துள்ளது .ஆனால் சுரேஷ் கோபியின் வழக்கோ விசாரிக்கப்பட்டு வருகிறது.

இதனிடையில் அமலாபாலின் வழக்கை புதுச்சேரி போக்குவரத்து துறை தான் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேரள போலீஸ் முடித்துவைத்துள்ளனர் .இதுகுறித்து புதுச்சேரி போக்குவரத்துறை கேரளா கவல்த்துறையிடம் ஆலோசனை கேட்டுள்ளனர்.இந்த போலி பதிவு சம்பந்தமான  நிருபிக்கப்பட்டால் 7 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அளிக்கப்பட வாய்ப்புள்ளது.

author avatar
Dinasuvadu desk