சென்னை திரும்பினார் நடிகர் ரஜினிகாந்த்…!

ஐதராபாத்தில் நடைபெற்று வந்த அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பை முடிவித்துவிட்டு ரஜினிகாந்த் இன்று சென்னை திரும்பியுள்ளார்.

இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் அண்ணாத்த. இந்த மீனா, குஷ்பூ, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, சதீஷ், சூரி, ஜெகபதி பாபு, போன்ற பல நடிகர்கள், நடிகைகள் நடித்து வருகிறார்கள். சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் டி. இமான் இசையமைத்து வருகிறார். கடந்த மார்ச் மாதம் படத்தின் படப்பிடிப்புக்காக ரஜினி ஹைதராபாத்திற்கு சென்றார்.

இந்த நிலையில், ஹைதராபாத்தில் நடைபெற்று வந்த படத்திற்கான படப்பிடிப்பு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு முடிவடைந்தது , இதையடுத்து நடிகர் ரஜினிகாந்த் இன்று சென்னை திரும்பியுள்ளார். அதற்கான புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. மேலும் அண்ணாத்த படத்திற்கான இறுதிக்கட்ட படப்பிடிப்பை கொல்கத்தாவில் 20 நாட்கள் நடத்த இயக்குநர் சிவா திட்டமிட்டுள்ளார். மேலும் இந்த திரைப்படம் வருகின்ற தீபாவளி தினத்தன்று

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.