அரண்மனை 3ம் பாகத்தில் நடிகர் ஜெய்..?

அரண்மனை படத்தின் 3ம் பாகத்தில் நடிகர் ஜெய் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இயக்குனர் சுந்தர்.சி இயக்கத்தில் வெளியான வந்தா ராஜாவா தான் வருவேன் மற்றும் ஆக்சன் போன்ற திரைப்படங்கள் எதிர்பார்த்த அளவு வெற்றியை அவருக்கு கொடுக்கவில்லை. இதனையடுத்து தற்போது இவர் சான் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகவிருக்கும் அரண்மனை -3 படத்தை இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்த அரண்மனை படத்தின் 3ம் பாகத்தில் ஆர்யா, ராஷி கண்ணா, விவேக், யோகி பாபு சாக்ஷி அகர்வால் உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ளதாக சமீபத்தில் தகவல்கள் கசிந்தது, மேலும் இந்த படத்தில் தற்பொழுது நடிகர் ஜெய் நடிக்கவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது, மேலும் இதற்கான மற்ற அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.