நடிகர் ஹரிஷ் கல்யாணை பார்த்து மீண்டும் இயக்குனராக ஆசை படுகிறேன்!!!!பிரபல இயக்குநர் !!!

 

  • “இஸ்பேட்ராஜாவும் இதயராணியும்” படத்தில் நாயகனாக நடிகர் ஹரிஷ்கல்யாண் நடித்துள்ளார்.
  • இந்நிலையில் இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது இயக்குநர் பொன்வண்ணன் பேசினார். 

நடிகர் ஹரிஷ் கல்யாண் கோலிவுட் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர்.இந்நிலையில் ஹரிஷ் கல்யாணின் முதல் படம் 2010 இல் வெளி வந்த சிந்து சமவெளி. இதில் அவர் அமலா பாலுக்கு ஜோடியாக நடித்திருப்பார். அரிது அரிது, பொறியாளன் என பல படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் பொறியாளன் படத்தில் நடித்து புகழ் பெற்றார்.இந்நிலையில் இந்த படத்தில் நாயகியாக கயல்ஆனந்தி நடித்து புகழ் பெற்றார். அதன் பிறகு சில படங்களில் முக்கிய வேடங்களில் இணைந்து நடிக்க தொடங்கினார்.

“இஸ்பேட்ராஜாவும் இதயராணியும்” படத்தில் நாயகனாக நடிகர் ஹரிஷ்கல்யாண் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தை ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கியுள்ளார்.மேலும் இந்த படத்தில் பாலசரவணன்,மா.க.பா.ஆனந்த் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.

இந்நிலையில் இந்த படத்தின்பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது இயக்குநர் பொன்வண்ணன் பேசினார். அப்போது அவர் பேசுகையில் ,” நடிகர் ஹரிஸ் கல்யாணுக்கு தமிழ் சினிமாவில் மட்டுமல்ல, இந்திய சினிமாவில் கூட உங்களுக்கு ஒரு இடம் இருக்கு. ஷாருக்கானின் ஆரம்பகால தாக்கம் முகத்தில் தெரிகிறது. முதல் தடவையாக ஒரு நடிகனை பார்த்து மீண்டும் இயக்குனராக ஆசைபடுகிறேன்” என்று அவர் கூறியுள்ளார்.

 

Leave a Comment