நம்மளால முடியாது அண்ணா ! விஜயகாந்த் படத்தில் நடிக்க மறுத்த அஜித்குமார்?

Vijayakanth இயக்குனர் எஸ். ஏ. சந்திரசேகர் இயக்கத்தில் 1999 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் பெரியண்ணா. படத்தில் விஜயகாந்த் மற்றும் சூர்யா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். மீனா மற்றும் மானஸா ஆகியோர் முக்கியான கதாபாத்திரங்களில் நடித்து இருந்தார்கள்.  இந்த திரைப்படம் ரசிகர்ளுக்கு மத்தியில் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை பெற்றது.

read more- கால் அமுக்கிவிட வந்த மூத்த நடிகர்! கேப்டன் விஜயகாந்த் செய்த நெகிழ்ச்சி செயல்?

அந்த சமயம் சூர்யாவுக்கு இந்த திரைப்படம் ஒரு திருப்பு முனையாகவும் அமைந்தது.ஏனென்றால், அந்த சமயம் தான் சூர்யா சினிமா துறையில் அறிமுகமான சமயம். எனவே, அவருடைய பெயரும் வெளியே தெரியும் அளவிற்கு படத்திற்காக அவரும் காத்திருந்தார். இந்த மாதிரி சூழ்நிலையில், தான் அவருக்கு பெரியண்ணா படத்திலும் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

read more- தூங்கட்டும் எழுப்பாதீங்க! கறிசோறு போட்டு கேப்டன் விஜயகாந்த் செய்த செயல்?

ஆனால், அந்த கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க நடிகர் அஜித்திடம் தான் பேச்சுவார்த்தை நடைபெற்று வந்ததாம். ஆனால், அந்த கதாபாத்திரத்தில் நடிக்க அஜித் மறுப்பு தெரிவித்துவிட்டாராம். படத்தில் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்த தயாரிப்பாளர் சுப்பையா அஜித்தை நேரில் சந்தித்தாராம். சந்தித்தவுடன் எஸ். ஏ. சந்திரசேகர் இயக்கத்திக் விஜயகாந்த்  நடித்து வரும் ஒரு படத்தில் முக்கியமான கதாபாத்திரம் இருக்கிறது நீங்கள் நடிக்கிறீர்களா என்று கேட்டாராம்.

read more- 2 லட்சத்தை அசால்ட்டாக தொலைத்த தயாரிப்பாளர்! விஜயகாந்த் செய்த செயல்? ப்பா என்ன மனுஷன்யா!

அதற்கு அஜித்குமார் எனக்கு அடிக்கடி முதுகில் வலி ஏற்படும். இவ்வளவு பெரிய படத்தில் நான் நடிக்க கமிட் ஆகிவிட்டது நடிக்காமல் படுத்துவிட்டேன் என்றால் அது நன்றாக இருக்காது. அதனால் என்னால் முடியாது அண்ணா என்று விஜயகாந்த் படத்திலே நடிக்க மறுத்துவிட்டாராம். இந்த தகவலை தயாரிப்பாளர் சுப்பையாவே பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.

Leave a Comment