ஓய்வை ரத்து செய்துவிட்டு மீண்டும் வருகிறார் டி வில்லியர்ஸ்? அவரே கூறிய பதில்!!

தென் ஆப்பிரிக்க அணியின் நட்சத்திர வீரர் ஏபி டி வில்லியர்ஸ் கடந்த ஆண்டு அனைத்து விதமான போட்டிகளில் இருந்தும் தனது ஓய்வை அறிவித்தார். ஆனால் சர்வதேச போட்டிகளில் ஓய்வு பெற்ற அவர் உள்ளூர் போட்டிகளில் 20 ஓவர் லீக் தொடரில் ஆடுவேன் என்று அறிவித்தார்.

இந்நிலையில் தற்போது ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் அவரிடம் மீண்டும் உலக கோப்பை தொடரில் வந்து ஆடுவீர்களா என்று கேள்வி கேட்கப்பட்டது, இது குறித்து பதில் அளித்த அவர்..

நான் வருடத்திற்கு 10 முதல் 11 மாதங்கள் வரை அனைத்துவிதமான போட்டிகளிலும் ஆடியுள்ளேன். இதனால் என் கவனத்தை சரியாக செலுத்த முடியவில்லை. இதன் காரணமாகவே ஓய்வினை அறிவித்தேன்.  இனி ஓய்வினை ரத்து செய்துவிட்டு மீண்டும் சர்வதேச போட்டிகளுக்கு வந்து ஆடுவது குறித்து யோசிக்க இடம் இல்லை என்று திட்டவட்டமாக கூறியுள்ளார் ஏபி டி வில்லியர்ஸ்.

author avatar
Srimahath

Leave a Comment