ஆதார் – மின் இணைப்பு அவகாசம் நீட்டிக்கப்படுமா? – இன்றே கடைசி நாள்…

மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்காததால் அவகாசம் நீட்டிக்கப்படுமா? என எதிர்பார்ப்பு.

மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான அவகாசம் இன்றுடன் நிறைவு பெறுகிறது. இன்னும், சுமார் ஒரு கோடி பேர் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்காததால் அவகாசம் நீட்டிக்கப்படுமா என எதிர்பார்க்கப்படுகிறது. மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என கடந்த அக்6ம் தேதி மின் வாரியம் அறிவிப்பு வெளியிட்டது.

இதையடுத்து, மின் நுகர்வோர் அனைவரும் தங்களது மின் இணைப்புடன், ஆதார் எண்ணை இணைத்து வருகின்றனர். இம்மாதம் 31-ம் தேதி வரை (இன்று) மின்வாரிய அலுவலகங்களில் சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.தமிழகம் முழுவதும் மின்வாரிய அலுவலகங்களில் 2,811 சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இணையதளத்திலும் ஆதார் எண்ணை இணைக்கும் பணி நடந்து வருகிறது.

அதன்படி, மின்இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க மின்வாரியம் https://adhar.tnebltd.org என்ற புதிய இணையதள முகவரி வெளியிடப்பட்டது. எனவே,  சிறப்பு முகாம்கள் மூலம் சுமார் 2.27 லட்சமும், ஆன்லைன் மூலம் 1.39 லட்சம் என நேற்று முன்தினம் வரை மொத்தம் 1.56 கோடி இணைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மின் இணைப்பு அவகாசம் இன்றுடன் நிறைவு பெறுகிறது. இருப்பினும், ஒரு கோடி பேர் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்காததால் அவகாசம் நீட்டிக்கப்படுமா? என எதிர்பார்க்கப்படுகிறது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment