பயணியிடம் செல்போன் திருட்டு.! திருடனை பிடித்து ஓடும் ரயிலில் இருந்து கீழே தள்ளி கொடூர கொலை.!

உ.பியில் ரயிலில் செல்போன் திருடியதால் ஓடும் ரயிலில் இருந்து இளைஞர் தூக்கி எறியப்பட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கடந்த சனிக்கிழமை அன்று உத்திர பிரதேசத்தில் டெல்லிக்கு செல்லும் அயோத்தி கான்ட் டெல்லி எக்ஸ்பிரஸ் ரயிலில் ஒரு இளைஞர் பயணியிடம் செல்போனை திருடியதாக தாக்கப்பட்டு ரயிலில் இருந்து வெளியே வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .

சக பயணியிடம் இருந்து அந்த இளைஞர் செல்போனை திருடியதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து அந்த இளைஞரை சக பயணிகள் கடுமையாக தாக்கியுள்ளனர். அந்த இளைஞர் கெஞ்சிய நிலையிலும் அவரை ஓடும் ரயிலில் இருந்து வெளியே தூக்கி எறியப்பட்டுள்ளார்.

இதில் ஷாஜஹான்பூரில் உள்ள தில்ஹர் ரயில் நிலையம் அருகே உள்ள கம்பத்தில் அடித்து பரிதாபமாக அந்த இளைஞர் உயிரிழந்தார். இது சமபந்தமான வீடியோ வைரலானதை தொடர்ந்து, இளைஞரை தாக்கி, தூக்கி எரிந்ததாக நரேந்திர துபே என்பவரை உத்திர பிரதேச போலீசார் கைது செய்தனர்.

 

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment