கருக்கலைப்பு மாத்திரை சாப்பிட்ட இளம் கர்ப்பிணி உயிரிழப்பு.!

பெங்களுருவில் கருக்கலைப்பு மாத்திரை சாப்பிட்டு 33 வயது கர்பிணிப்பெண் உயிரிழந்துள்ளார்.

பெங்களுருவில் ப்ரீத்தி என்ற 33 வயது கர்ப்பிணிப்பெண், கணவன் இல்லாத சமயம் கருக்கலைப்பு மாத்திரை சாப்பிட்டு உயிரிழந்துள்ளார். கடந்த டிச-10 ஆம் தேதி மருத்துவ பரிசோதனையின்போது கருத்தரித்திருப்பதை அறிந்த தம்பதிகள், ஏற்கனவே 11 மாத ஆண்குழந்தையை வளர்த்து வருகின்றனர்.

முதல் குழந்தை ஏற்கனவே கைக்குழந்தையாக இருப்பதால், இரண்டாவது கரு உண்டாகியிருப்பது பிடிக்காத ப்ரீத்தி, கணவனிடம் கருவை கலைக்கலாம் என்று கூறியிருக்கிறார், ஆனால் கணவனோ அதற்கு சம்மதிக்கவில்லை. இதனால் கணவன் இல்லாத சமயம் பார்த்து ப்ரீத்தி, கருக்கலைப்பு மாத்திரை சாப்பிட்டுள்ளார்.

அதன்பிறகு அதிகப்படியான ரத்தப்போக்கு ஏற்பட்டு வலியால் ப்ரீத்தி துடித்துள்ளார், இதனால் அவரது கணவன் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார், ஆனால் மருத்துவர்கள், ப்ரீத்தி வரும் வழியிலேயே இறந்து விட்டார் என்று கூறியிருக்கிறார்.

ப்ரீத்தியின் சகோதரர் கருக்கலைப்பு மாத்திரை சாப்பிட்டு இறந்துள்ளார் என்று காவல் நிலையத்தில் தெரிவித்துள்ளார், போலிஸார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

author avatar
Muthu Kumar

Leave a Comment