ஆன்லைனில் பிரியாணி ஆர்டர் செய்து சாப்பிட்ட இளம்பெண் உயிரிழப்பு..! விசாரணைக்கு உத்தரவிட்ட அமைச்சர்..!

கேரளாவில் பிரியாணி ஆர்டர் செய்து சாப்பிட்ட 20 வயது இளம்பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு. 

கேரள மாநிலம், காசர்கோடு அருகே உள்ள பெரும்பாலைச் சேர்ந்த அஞ்சு ஸ்ரீபார்வதி என்ற 20 வயது இளம்பெண் டிசம்பர் 31ஆம் தேதி காசர்கோட்டில் உள்ள ரோமன்சியா என்ற உணவகத்தில் ஆன்லைனில் பிரியாணி வகையை சேர்ந்த ‘குழிமந்தி’ என்ற உணவை ஆர்டர் செய்து சாப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் அவருக்கு திடீரென உடலநலக்குறைவு ஏற்பட்டதையடுத்து, அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுமி, அங்கிருந்து கர்நாடகா மாநிலம் மங்களூருவில் உள்ள மற்றொரு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போது உயிரிழந்தார்.

இதுகுறித்து அவரது பெற்றோர் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளனர். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், உணவு விஷம் கலந்ததாகக் குற்றம் சாட்டப்படும் ஹோட்டல்களின் உரிமம் உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டத்தின் (FSSA) கீழ் ரத்து செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment