தமிழகத்தில் வருகிற ஜூலை 15-ஆம் தேதி வரை ஏற்கனவே வாங்கிய ஆயிரம் ரூபாய் பஸ் பாஸ் செல்லும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை காரணமாக கடந்த மே 10ஆம் தேதி முதல் கடுமையான கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனையடுத்து கொரோனா தொற்று குறையை தொடங்கியதை அடுத்து தற்போது கட்டுப்பாடுகள் ஒவ்வொன்றாக தளர்த்தப்பட்டு கொண்டிருக்கிறது. இந்நிலையில் தமிழகத்தில் இன்று முதல் நான்கு மாவட்டங்களில் பேருந்து போக்குவரத்து மீண்டும் துவங்கப்பட்டுள்ள நிலையில் அவசர தேவைகளுக்கு மட்டும் மக்கள் இ-பதிவு செய்து பயணிக்க அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும், இன்று முதல்கட்டமாக 1,400 பேருந்துகள் இயக்கப்படுகிறது. இந்நிலையில், இது குறித்து பேசியுள்ள போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் அவர்கள், பேருந்து போக்குவரத்துகள் 4 மாவட்டங்களில் துவங்கப்பட்டுள்ள நிலையில், ஏற்கனவே வாங்கியுள்ள ஆயிரம் ரூபாய் பஸ் பாஸ் ஜூலை 15ஆம் தேதி வரை செல்லும் எனவும், பெண்கள் மாற்றுத்திறனாளிகள் திருநங்கைகள் என மூன்று வண்ணங்களில் இலவச பேருந்து டிக்கெட்டுகள் வழங்கப்படுகிறது எனவும் கூறியுள்ளார்.
IPL 2024 : இன்று நடைபெற்ற போட்டியில் லக்னோ அணி மும்பை அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐபிஎல் தொடரின் 48வது போட்டியாக இன்று லக்னோ…
BCCI : டி20 உலகக்கோப்பைக்கான பிசிசிஐ அறிவித்துள்ள இந்திய அணியை ரசிகர்கள் இணையத்தில் விமர்சித்து வருகின்றனர். ஐபிஎல் தொடர் நடைபெற்று வரும் நிலையில் தற்போது டி20 உலகக்கோப்பை…
Israel : தெற்கு காசாவில் இஸ்ரேல் தாக்குதல் தொடரும் என அந்நாட்டு பிரதமர் நெதன்யாகு திட்டவட்டமாக தெரிவித்தார். இஸ்ரேலுக்கு எதிரான ஹமாஸ் அமைப்பினரை முழுதும் அழிக்கும் வரையில்…
Gp Muthu : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகியது பற்றி ஜிபி முத்து பேசியுள்ளார். குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சி பெரிய…
T20 World Cup 2024: டி20 உலக கோப்பை தொடருக்காக ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்தது. ஐபிஎல் தொடர் முடிந்த உடனே டி20 உலகக்கோப்பை…
Bird Flu : இந்தியாவில் பரவும் பறவை காய்ச்சல் தொடர்பாக இந்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது. நமது நாட்டில் மட்டும்மல்லாது உலகில் ஒரு சில நாடுகளில்…