#Breaking : டி20 போட்டியின் போது கிரிக்கெட் மைதானத்தில் தற்கொலைப்படை தாக்குதல்.!

ஆப்கானிஸ்தானில் டி20 தொடர் நடைபெற்று கொண்டிருக்கும் போது தற்கொலைப்படை தாக்குதல் நடைபெற்றது. 

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள கிரிக்கெட் ஸ்டேடியத்தில் ஷ்பஜீசா கிரிக்கெட் லீக் எனும் உள்ளூர் டி20 கிரிக்கெட் லீக் தொடர் நடைபெற்றது. அப்போது,  பேண்ட்-இ-அமிர் டிராகன்ஸ் மற்றும் பாமிர் சல்மி எனும் அணிகளுக்கு இடையே போட்டி நடைபெற்று கொண்டிருந்தது.

அந்த சமயம், திடீரென தற்கொலைப்படை தாக்குதல் நடைபெற்றது . திடீரென மைதானத்தில் குண்டு வெடித்தது உலக நாடுகளில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

அந்த போட்டியின் போது, ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரிகள் மைதானத்தில் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment