தங்கத்தின் விலை கிடுகிடு உயர்வு.! அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்…

புதிய உச்சமாக தங்கம் விலை ரூ.46,000-ஐ தொட்டது, சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 352 அதிகரிப்பு.

எந்த அணிகலன்கள் அணிந்தாலும் தங்க அணிகலன்களுக்கு எப்பொழுதும் மவுசு கொஞ்சம் அதிகம் தான். மக்களும் தங்கத்தில் அதிகளவு முதலீடு செய்கின்றனர். தங்கத்தின் விலையில் அவ்வப்போது ஏற்ற இறக்கம் காணப்படுவதுண்டு. அந்த வகையில், தங்கம் விலை இன்று அதிர்ச்சியை கொடுக்கும் வகையில் உயர்ந்துள்ளது.

அதன்படி, சென்னையில் தங்கத்தின் விலை உயர்ந்து ரூ.46,000க்கு  விற்பனை செய்யப்படுகிறது. இன்று 22 கேரட் ஆபரண தங்கம் சவரனுக்கு ரூ.352 உயர்ந்து ரூ.46,000 க்கும், கிராமுக்கு ரூ.44 உயர்ந்து ரூ.5,750க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிராம் வெள்ளியின்  ரூ.1 உயர்ந்து ரூ.82.80க்கும், கிலோ வெள்ளி ரூ.82,800க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை அதிகரித்துள்ளதால் நகை வாங்கும் நகை பிரியர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.