ஒரே நேரத்தில் 6 இடத்தில் கடல் நீரை மேகம் உறிஞ்சும் அரியகாட்சி வாஷிங்டனில் நிகழ்ந்துள்ளது!

அமெரிக்காவின் வாஷிங்டனில் ஒரே நேரத்தில் ஆறு இடங்களில் இருந்து கடல் நீரை மேகம் உறிஞ்சும் அதிசய காட்சி வெளியாகி உள்ளது.

அமெரிக்காவின் லூசியானா, மிசிசிபி, அலபாமா மற்றும் மேற்கு புளோரிடா ஆகிய பகுதிகளில் புயல் சின்னம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் லூசியானா மாகாணத்தின் கடல் பகுதியில் மீன்பிடிக்க சென்று வந்தவர்கள் தற்போது பேரதிசயம் ஒன்றை கண்டுள்ளனர். அதாவது அமெரிக்காவின் வாஷிங்டன் பகுதியில் உள்ள கடலில் மேகம் கடல் நீரை 6 இடங்களில் ஒரே நேரத்தில் உறிஞ்சி எடுத்துக் கொண்டிருக்கும் அரிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.

ஹாலிவுட் படங்களில் வருவது போல இந்த காட்சி இருந்ததாக இதனை நேரில் பார்த்தவர்கள் கூறியுள்ளனர். மீன் பிடிக்க சென்றவர்கள் எடுத்த புகைப்படம் மற்றும் வீடியோக்கள் இணைய தள பக்கங்களில் வைரலாகி வருகிறது.

author avatar
Rebekal