சபரிமலையில் நாளை மண்டல பூஜை.! சுவாமி ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவித்து ஊர்வலம்.!

தங்க அங்கி அணிவிக்கப்பட்டு சபரிமலை ஐயப்பன் ஊர்வலம் இன்று பிற்பகல் பம்பை வரவுள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டு திரளான பக்தர்கள் இருமுடி தாங்கி தரிசனம் செய்து வருகின்றனர். நாளை சபரிமலையில் மண்டல பூஜை நடைபெற உள்ளதால் பக்தர்கள் கூட்டம் அதிகமாக உள்ளது .

இந்நிலையில், திருவிதாங்கூர் மகாராஜா சபரிமலை ஐயப்பனுக்கு வழங்கிய தங்க அங்கி, சுவாமி ஐயப்பனுக்கு அணிவித்து கடந்த 21ஆம் தேதி பத்தனம்திட்டா பார்த்தசாரதி ஆலயத்தில் இருந்து சுவாமி ஊர்வலம் புறப்பட்டது.

அந்த ஊர்வலம் இன்று பிற்பகல் பம்பையை அடைய உள்ளது. இன்று மலை தங்க அங்கியுடன் இருக்கும் சுவாமி ஐயப்பனுக்கு தீபாராதனை நடைபெற உள்ளது. நாளை சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டலபூஜை நடைபெற உள்ளது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment