தந்தையின் விந்தணுவுடன் தனது சொந்த விந்தணுவைக் கலந்து கர்ப்பமாக்கிய நபர்.!

இங்கிலாந்தின் பார்ன்ஸ்யில் உள்ள ஒரு நபர், தனிப்பட்ட கருவுறுதல் பிரச்சினைகள் மற்றும் செயற்கை கருத்தரிப்புக்கு பண நெருக்கடி காரணமாக தனது துணையை கருவுறச் செய்வதற்காக தனது தந்தையின் விந்தணுவுடன் தனது விந்தணுவை கலந்து கர்ப்பமாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் குறித்து உள்ளூர் கவுன்சில் அமைப்பு அறிந்ததும் அந்த குழந்தையின் பெற்றோர் யார் என்பதனை கண்டறிய தூண்டியது. இந்நிலையில், அந்த நபர் தான் தந்தையா? என்பதை அறிய அவரது டிஎன்ஏ பரிசோதனையை மேற்கொள்தற்கு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தி பார்ன்ஸ் நகர உள்ளூர் கவுன்சில் அமைப்பு நீதிமன்றத்தை நாடியுள்ளது.

இது குறித்து இங்கிலாந்தில் உள்ள பிரபல ஊடகமான தி கார்டியன் வெளியான செய்தியின் படி, அந்த நபரின் பெயர் சட்ட காரணங்களுக்காக தெரிவிக்கப்படாவில்லை. ஆனால், நீதிமன்ற ஆவணங்களில், அவரது பெயருக்கு பதிலாக PQ என மட்டுமே அடையாளமாக தெரிவிக்கப்பட்டள்ளது.

மேலும், (PQ) மற்றும் அவரது மனைவியான (JK) கருவுறுதல் பிரச்சனைகளை அனுபவித்ததால்,  செயற்கை கருத்தரிப்புக்கு பண இல்லாமல், அவர் தனது விந்தணுவை தனது தந்தையின் (RS) விந்தணுவுடன் கலக்க ஒப்புக்கொண்டார். பின்னர் அவரது மனைவிக்கு செலுத்தப்பட்டது. பின்னர், அவர்களுக்கு 5 வயது குழந்தை பிறந்துள்ளது.

ரிசர்வ் வங்கி – நேபாள ராஸ்ட்ரா வங்கி இடையே UPI-NPI இணைப்புக்கு ஒப்பந்தம்

இந்நிலையில், உள்ளூர் கவுன்சில் அமைப்பு இந்த சம்பவம் தொடர்பாக நீதிமன்றத்தை நாடிய நிலையில், உயர் நீதிமன்ற நீதிபதி, “குடும்பத்தின் தனியுரிமையில் தலையிட இயலாது. அந்த நபரை கட்டாயப்படுத்தி டி. என். ஏ. சோதனைக்கு உட்படுத்த முடியாது என தீர்ப்பளித்து, இந்த விவகாரத்தில் கவுன்சிலுக்கு எந்தப் பங்கும் இல்லை என்று கூறி மனுவை தள்ளுபடி செய்துள்ளது.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.

Leave a Comment