வங்கக்கடலில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது!

தமிழ்நாடு கடலோர பகுதிகளில் வரும் 19-ஆம் தேதி கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல்.

வங்க கடலில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், கடந்த வாரம் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது. இதில் குறிப்பாக கடலூர், மயிலாடுதுறை, சீர்காழி உள்ளிட்ட பகுதிகளில் அதி கனமழை பெய்தது.

இந்த நிலையில், நாளை தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழ்நாடு கடலோர பகுதிகளில் வரும் 19-ஆம் தேதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்பிறகு நவம்பர் 19ம் தேதி முதல் மழையின் தீவிரம் படிப்படியாக குறையும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் கூறியுள்ளது.

மேலும், தெற்கு அந்தமான் பகுதி, அதனையொட்டியுள்ள தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நாளை மணிக்கு 55 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment