வயிற்று வலினு வந்த ஆணுக்கு…ஆண் குழந்தை பிறந்த ஆச்சரிய அதிர்ச்சி.!டாக்டர்கள் ஷாக்!

  • வயிற்று வலி என்று மருத்துவமனை சென்ற ஆணுக்கு குழந்தை பிறந்த நிகழ்வு ஆதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
  • இந்த விநோத நிகழ்வானது அண்டை நாடான  இலங்கையில் நடந்துள்ளது.

இலங்கை நாட்டில் மாத்தறை மாவட்டத்தில் மருத்துவமனை ஒன்றில் கடந்த வாரம் அதே பகுதியைச் சேர்ந்த ஒரு நபர் வயிற்று வலி காரணமாக மருத்துவமனைக்கு சென்றுள்ளார். முகத்தில் தாடி,மீசையுடன் வந்த அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஆண்கள் வார்டுக்கு அனுப்பி உள்ளனர்.

ஆண்கள் வார்டில் அந்த நபரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் வயிற்றில் குழந்தை இருப்பதற்கான அறிகுறி இருந்ததை கண்டு கடும் அதிர்ச்சியடைந்தனர்.சற்று நேரத்தில் பரபரப்பான மருத்துவமனையின் மருத்துவர்கள் அந்த நபருக்கு சோதனை நடத்தினர்.அந்த சோதனையில் அவருக்கு எப்போது வேண்டுமானாலும் குழந்தை பிறக்க வாய்ப்புள்ளது என்பதை அறிந்த அவர்கள் அந்த நபரை  பிரசவ வார்டுக்கு விரைவாக அனுப்பினார்.


பிரசவ வார்டிற்கு முகத்தில் தாடி, மீசையுடன் நபர் ஒருவர் நுழைந்ததும் ஏற்கனவே அங்கு அனுமதிக்கப்பட்டிருந்த கர்ப்பிணிகள் அந்த நபரை பார்த்து ஆச்சரியமடைந்தனர். இந்நிலையில் அவருக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்தது.

இந்த சம்பவம் மருத்துவமனை முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது.இந்நிலையில்  இந்த விவகாரம் தொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் கூறுகையில் தாடி மீசையுடன் இருந்த நபர் ஒரு பெண். ஹார்மோன் சுரப்பு காரணமாக ஆண்களைப் போலவே வாழ்ந்து வந்து உள்ளார். அதனால் அவருக்கு தாடி, மீசை வளர்ந்து இருக்கிறது. தோற்றத்திலும் மனதளவிலும் ஒரு ஆணாக இருந்தாலும் உடல் அளவில் அவர் ஒரு பெண் தான்.

மேலும் அறிவியல் ரீதியாக அவரால் குழந்தை பெற்றுக்கொள்ள முடியும் என்றாலும் பெற்ற குழந்தைக்கு அவரால் பால் எதுவும் கொடுக்க முடியாத நிலை இருப்பதால் குழந்தையை மருத்துவமனையே கவனித்து வருகிறது என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில் தனக்கு பிறந்த ஆண் குழந்தையை வளர்க்க அந்த நபர் விரும்பவில்லை என்று அவர் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தாடி மீசையுடன் இருந்த அந்த நபர் வைத்திருந்த அடையாள அட்டைகளை பார்க்கும் போது அவர் ஆண் என்றே அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது. மேலும் அவர் ஒர் ஆட்டோ ஓட்டுநராக உள்ளார். அவருடைய பெயர் மற்றும் அவர் சார்ந்த தகவல்களை மருத்துவமனை நிர்வாகம் வெளியிட வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் இந்த சம்பவம் அந்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

kavitha

Recent Posts

ஐபிஎல் திருவிழாவின் இன்றைய போட்டி ..! மும்பையுடன் பலப்பரீட்சை நடத்தும் கொல்கத்தா !!

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக மும்பை அணியும், கொல்கத்தா அணியும் மோதுகிறது. நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரில் இன்றைய 50-வது போட்டியாக…

2 hours ago

அட்சய திருதியை 2024 ல் எப்போது? தங்கம் வாங்குவதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க.!

அட்சய திருதியை 2024-அட்சய திருதியையின் சிறப்புகள் மற்றும் இந்த ஆண்டுக்கான தேதி எப்போது என தெரிந்து கொள்வோம். அட்சய திருதியை 2024: இந்த ஆண்டு மே மாதம்…

3 hours ago

IPL2024: ராஜஸ்தானை வீழ்த்தி ஹைதராபாத் திரில் வெற்றி..!

IPL2024:ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 200 ரன்கள் எடுத்தனர். இதனால் ஹைதராபாத் அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில்…

9 hours ago

ஆந்திராவில் 2,000 ஆயிரம் கோடி ரூபாயுடன் சிக்கிய 4 கண்டெய்னர்கள்.!

Andhra pradesh: ஆந்திராவில் ரூ.2,000 கோடி பணத்துடன் சென்ற 4 கண்டெய்னர்கள் பிடிபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திராவில் மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதால் பறக்கும்…

15 hours ago

என்னதான் ஆச்சு .. ?அறிவித்தவுடன் சொதப்பும் இந்திய வீரர்கள்… கவலையில் ரசிகர்கள் !

Indian Team : டி20 அணியை அறிவித்த பிறகு இந்திய அணியில் இடம்பெற்றுள்ள சில வீரர்கள் அடுத்தடுத்து ஐபிஎல் போட்டியில் சொதப்பி வருவதால், ரசிகர்கள் கவலையில் இருக்கின்றனர். வருகிற…

15 hours ago

கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் முயற்சி.? காங்கிரஸ் அமைச்சரின் சர்ச்சை கருத்து.!

Prajwal Revanna : கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் ரேவண்ணா முயற்சித்துள்ளார் என கர்நாடகா காங்கிரஸ் அமைச்சர் சர்ச்சையாக கருத்து தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி…

15 hours ago