வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி இன்று உருவாகிறது!

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழகம் நோக்கி நகரும் என்பதால் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு.

வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் தொடங்கி தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த சமயத்தில் தென் மேற்கு வங்கக்கடலில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகுகிறது. தமிழகம் நோக்கி நகரும் என்பதால் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

அதன்படி, தமிழகத்தில் 11ஆம் தேதி முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி புயலாக மாற வாய்ப்பு இல்லை எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகுவதை அடுத்து மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் கடலுக்கு சென்ற மீனவர்கள் கரை திரும்ப வேண்டும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment